ஏர் இந்தியாவின் புதிய CEO & MD ஆக இல்கர் அய்சி நியமனம் - டாடா!!

திங்கள், 14 பிப்ரவரி 2022 (17:05 IST)
ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநராக இல்கர் அய்சி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 
ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை 18,000 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது. இதனைத்தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக டாடா குழுமத்துடன் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தற்போது ஏர்-இந்தியா விமானத்தில் பயணிகள் ஏறியவுடன் ரத்தன் டாடாவின் குரல் ஒலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. 
 
இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநராக இல்கர் அய்சி நியமனம் செய்யப்பட்டிருப்பதாக டாடா தெரிவித்திருக்கிறது. துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான இல்கர் அய்சி, ஏர் இந்தியாவின் சி.இ.ஓ.வாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்