’பரபரப்பு’ - வாடகை கேட்ட வீட்டு உரிமையாளருக்கு நடந்த கொடுமை!

ஞாயிறு, 18 செப்டம்பர் 2016 (15:20 IST)
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹனமந்த் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராம் ஒரு குடியிருப்பை சொந்தமாக வைத்துள்ளார்.


 
அதில், ஏராளமான வீடுகள் உள்ளன. இந்நிலையில், அதில் ஒரு பகுதியை ஹேமலதா என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அதை பேயிங் கெஸ்ட்டுக்காக வாடகைக்கு விட்டிருந்தார் ஹேமலதா. ஆனால் ஹேமலதா சிவராமுக்கு வாடகை கொடுக்காமல் அதற்கு பல காரணங்களை சொல்லி வந்துள்ளார்.

இந்நிலையில் சிவராமும், அவரது கட்டடத்தில் வேலை பார்ப்பவரான சித்தராஜு என்பவரும் ஹேமலதாவிடம் போய் வாடகை கேட்டனர். அப்போது ஹேமலதாவுக்கும், வீட்டு உரிமையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஹேமலதாவின் 22 வயது மகன் ஷ்ரேயாஸ் கோபமடைந்து அடுப்படிக்குப் போய் அங்கு அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரை எடுத்து வந்து சிவராம் மீது ஊற்றி விட்டார்.

இதை அடுத்து, அவர் அலறித் துடித்தார். பின் சிவராம் அதே சாம்பார் சட்டியைப் பிடுங்கி ஷ்ரேயாஸ் மீது வீசினார். இதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. இதை அடுத்து, அவரும் வலியில் அலறினார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், காவல்துறையினர், விரைந்து வந்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், பின் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்