சூதாட்டத்தில் தோற்றதால் குழந்தையை விற்ற கொடூரன்: மனைவி புகாரால் கைது!

திங்கள், 24 ஜனவரி 2022 (15:16 IST)
சூதாட்டத்தில் தோற்றதால் பெற்ற குழந்தையை விற்ற கொடூரனை அவரது மனைவியே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
 சூதாட்டத்தில் அடிமையான ஏற்கனவே ஒருவருக்கு நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் ஐந்தாவதாக பிறந்த குழந்தையை சூதாட்ட கடனுக்காக விற்றுள்ளார். மனைவியை சமாதானப்படுத்தி அந்த குழந்தையை விற்ற கொடூரனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
பத்துமாதம் சுமந்து பெற்ற குழந்தையை பிரிய முடியாத ஏக்கத்தில் இருந்த இளம்பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் குழந்தையை விற்ற சூதாட்டக்காரன் மற்றும் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்
 
பெற்ற குழந்தையை சூதாட்ட கடனுக்காக தந்தையை விற்பனை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்