டிசார்ட் ஜீன்ஸ் ஆகியவற்றுக்கு நோ; அரசு அதிகாரிகளுக்கு ஆடைக்கட்டுபாடு விதித்த திரிபுரா

செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (20:49 IST)
அரசு அதிகாரிகள் பணி நேரத்தில் ஜீன்ஸ், டிசார்ட் மற்றும் கூலிங் கிளாஸ் அணியக்கூடாது என்று திரிபுரா அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

 
திரிபுராவில் அரசு அதிகாரிகளுக்கு ஆடைக் கட்டுபாடுகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம் என்று அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அரசு அதிகாரிகள் பணி நேரத்தின் போது ஜீன்ஸ், டிசார்ட், கூலிங் கிளாஸ் உள்ளிட்டவற்றை அணிவது தொடர்பாக பல்வேறு புகார் வந்துள்ளன.
 
எனவே, திரிபுரிராவில் அரசு அதிகாரிகள் பணி நேரத்தின்போது ஜீன்ஸ், டிசார்ட், கூலிங் கிளாஸ் உள்ளிட்டவற்றை அணிய தடை விதிக்கப்படுகிறது. மேலும், அலுவலக ஆலோசனைக் கூட்டங்களின் போது அரசு அதிகாரிகள் தங்களது மொபைல் போன்களை அணைத்து வைக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெளிவாக ஆடைக்கட்டுபாடு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்