போலி தகவலை நம்பி ஏமாற வேண்டாம்- BSNL அறிவுரை

செவ்வாய், 6 ஜூலை 2021 (21:02 IST)
மோசடி நடத்தும் நோக்கில் கூறப்படும் பொய்யான  தகவல்களை நம்பி தனிப்பட்ட வங்கி விவரங்களைப் பகிர வேண்டாம் என பிஎஸ்.என்.எல் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சில மர்ம நபர்கள் வாடிக்கையாளர்களின் சிம் ஆவணம் சரிபார்க்கப்படுவதாகவும், உதவி எண்ணை தொடர்புகொள்ள கூறுகின்ற போலியான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் அத்தகவல்களைப் புறக்கணிக்க வேண்டும் எனவும் பிஎஸ்.என்.எல். கூறியுள்ளது.

மேலும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்துத் தனிப்பட்ட வங்கி விவரங்கள் KYC விவரங்களைப் பகிர வேண்டாமெனவும் கூறியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்