தேசியசின்னமான அசோக சக்கரத்தை வடிவமைத்தவர் காலமானார்

ஞாயிறு, 25 டிசம்பர் 2016 (17:29 IST)
இந்தியாவின் தேசிய சின்னமான அசோக சக்கரத்தை வடிவமைத்து கொடுத்த தீனநாத் பார்கவா இன்று காலமானார்.


 

 
இந்தியாவின் தேசிய சின்னமான, அசோக சக்கரத்தை வடிவமைத்தவர்களுள் ஒருவர் தீனநாத் பார்கவா. இவர் இன்று மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உயிரிழந்தார். தற்போது அவருக்கு வயது 89.
 
கடந்த சில மாதங்களாக இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார் தீனநாத். அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்