கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பேசிய சுப்பிரமணிய சாமி, ”ராமர் கோவில் குறித்த வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வரும் என நாங்கள் நம்புகிறோம். அந்த தீர்ப்பு வந்தவுடன் ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கும்.
ராமர் கோவில் கட்டும் பணியை விஷ்வ இந்து பரிஷத் முயற்சி செய்யப்போவதில்லை. ஏனெனில், ராமர் பிறந்த பூமியில் ராமர் கோயிலை கட்டுவது ஒவ்வொரு இந்துவின் கடமை. இந்து மற்றும் முஸ்லிம்களின் பரஸ்பர ஒப்புதலுடன் ராமர் கோவில் கட்டப்படும்” என்று கூறியிருந்தார்.