மின் கட்டணம் பாதியாகக் குறைப்பு: கெஜ்ரிவால் அரசு தாராளம்

புதன், 25 பிப்ரவரி 2015 (20:06 IST)
டெல்லி மக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக 50 சதவீதம் மின்சாரக் கட்டணத்தைக் குறைத்து கெஜ்ரிவால் அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில்   முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு  மின்சார கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தக்  கட்டண குறைப்பு வரும் மார்ச் 1ஆம் தேதி அமலுக்கு வருகிறது.
 
இந்த அறிவிப்பை துணை முதல்வர்  மணிஷ் சிசோடியா வெளியிட்டார்.   முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
 
ஆம் ஆத்மி கட்சியின்  தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக மின்சார கட்டணம் பாதியாக குறைக்கப்படும் என்று அறிவித்து இருந்தது. அதன் அடிப்படையில் மின்சார கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 90 சதவீத டெல்லி வாசிகள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்