ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 20 பேர் பலி; ஆபத்தில் 200 நோயாளிகள்! – டெல்லியில் அதிர்ச்சி!

சனி, 24 ஏப்ரல் 2021 (10:49 IST)
டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் 20 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. டெல்லியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ள நிலையில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் மத்திய அரசை கேட்டுக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக 20 பேர் உயிரிழந்து விட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 200 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் உடனடி நடவடிக்கை தேவை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்