இந்தியாவில் உள்ள ட்விட்டர் அலுவலகங்களை மூடுங்கள்: எலான் மஸ்க் உத்தரவு..!

வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (11:14 IST)
இந்தியாவில் உள்ள இரண்டு ட்விட்டர் அலுவலகங்களை மூட அந்நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
இந்தியாவில் மும்பை டெல்லி மற்றும் பெங்களூர் ஆகிய பகுதிகளில் ட்விட்டர் நிறுவனத்தின் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் மும்பை மற்றும் டெல்லி அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் என்றும் உடனடியாக மும்பை டெல்லி அலுவலகங்களை மூட வேண்டும் என்றும் உத்தரவு பெற்றுள்ளார். 
 
பெங்களூரில் உள்ள ட்விட்டர் அலுவலகம் மற்றும் செயல்படும் என்றும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களை மூட எலான் மஸ்க் உத்தரவிட்டது ஏன் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்