மோடியும் அமித்ஷாவும் கலக்கத்தில் உள்ளனர்: டி.ராஜா

வியாழன், 6 ஜனவரி 2022 (13:56 IST)
மோடியும் அமித்ஷாவும் கலக்கத்தில் உள்ளனர் என கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
நேற்று பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபோது மாநில விவசாயிகள் நடத்திய போராட்டம் காரணமாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது
 
இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா அவர்கள் இது குறித்து கூறிய போது மக்கள் பாஜகவுக்கு எதிராக கொந்தளிக்கத் தொடங்கி விட்டனர் என்றும் ஐந்து மாநில களநிலவரங்களை அறிந்து பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கலக்கத்தில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்