இந்தத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டது. இன்று முதல் அதாவது மார்ச் 13 முதல் 31ஆம் தேதி வரை இந்த தேர்வு நடைபெறவுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் முறையில் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் கொண்டு வர வேண்டிய பொருள்கள்
* நுழைவுச் சீட்டு
* அடையாள அட்டை (ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை)
* ஒரு புகைப்படம்
* பேனா
* குடிநீர் பாட்டில்
மேற்கண்டவை தவிர எந்த பொருள்களும் கொண்டு வர அனுமதி இல்லை என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும், தேர்வு தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு NTA-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தினைப் பார்வையிடும்படி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.