பட்டேல் சிலை சுற்றுலா: சர்ச்சையான முதலைகளை இடமாற்றும் நடவடிக்கை

திங்கள், 28 ஜனவரி 2019 (17:23 IST)
உலகின் மிகப்பெரிய சர்தார் பட்டேல் சிலையைக்காண விமானம் மூலம், பார்வையாளர்கள் வந்துசெல்வதற்காக கிட்டத்தட்ட 300 முதலைகள் இடம் மாற்றம் செய்யப்படுகின்றன.
 
நீரில் விமானம் வந்திறங்கும் வசதிக்காக சிலை வளாகத்திற்கு அருகிலுள்ள நீர்தேக்கத்திலிருந்து முதலைகளை வேறு இடத்திற்கு மாற்றும் பணியை இந்திய அதிகாரிகள் தொடங்கிவிட்டனர்.
 
9 அடி வரை நீளமுள்ள முதலைகள் சிலவற்றை உலோக கூண்டுக்குள் அடைத்து குஜராத்தின் மேற்கு பகுதிக்கு இவை அனுப்பி வைத்துள்ளனர்.
 
ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த திட்டத்தை விமர்சித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம், உலகின் மிகப்பெரிய சிலையான சர்தார் படேல் சிலை குஜராத்தில் திறந்துவைக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்