111 நாட்களுக்கு பின் 35 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா! – இந்திய நிலவரம்!

செவ்வாய், 6 ஜூலை 2021 (09:42 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ள நிலையில் 111 நாட்களுக்கு பிறகு பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 34,703 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,06,19,932 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 553 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,03,281 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,97,52,294 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 4,64,357 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்