இந்தியாவில் 40 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

சனி, 5 செப்டம்பர் 2020 (12:14 IST)
இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 86432 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்துள்ளது. 
 
அதாவது கொரோனா பாதிப்பு 40,23,179 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1089 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 69,561 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,37,151ல் இருந்து 31,07,223 ஆக உயர்ந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்