தொடரும் கேஸ் விலை உயர்வு…மக்கள் அதிர்ச்சி

வியாழன், 1 ஜூலை 2021 (15:51 IST)
மக்களின் அத்தியாவசித் தேவைகளில் ஒன்று சமையல் கேஸ். இதன் விலை சமீபகாலமாக உச்சத்தை அடைந்து வந்த நிலையில் இன்று மேலும் ரூ.25 உயர்ந்துள்ளது. இது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்தியாவில் சமீப காலமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்து வரும் நிலையில் இன்று ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது.

 கடந்த , ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சமையல் காஸ் சிலிண்டர்களின் விலை  ரூ.825 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று மேலும்  விலை உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களில் மட்டும் சமையல் கேஸ் எரிவாயு விலை ரூ.140 அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்