தொடங்கியது காங்கிரஸ் மாநாடு.. சோனியா, ராகுல் பங்கேற்காதது ஏன்?

வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (15:28 IST)
காங்கிரஸ் கட்சியின் மாநாடு இன்று தொடங்கிய நிலையில் இந்த மாநாட்டில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் என்ற பகுதியில் காங்கிரஸ் கட்சியின் 85 ஆவது மாநாடு மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. வரும் மக்களவை தேர்தலுக்கான வியூகம் வகுப்பதற்காக இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே  உள்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டிருக்கும் நிலையில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை. 
 
இதற்கான காரணமும் இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட வில்லை. எனினும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை வழிநடத்தி வருவதாக வருகின்றனர் 
 
இன்று பிற்பகலுக்கு மேல் சோனியா காந்தி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்