மும்பையை சேர்ந்த ஒரு நபர் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க நல்ல மாப்பிள்ளையை தேடி வந்துள்ளார். அப்போது அவரிடம் அறிமுகமாகிய 32 வயதான ஒரு நபர் தான் ஒரு பெரிய நிறுவனத்தில் பெரிய வேலையில் உள்ளதாகவும், டிராவல் ஏஜென்சி ஒன்றை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய அந்த பெண்ணின் தந்தை, தனது மகளுக்கு அந்த நபரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். இவர்களுடைய திருமணம் டிசம்பர் மாதம் நிச்சயக்கப்பட்டிருந்தது. ஆனால் போதிய பணம் இல்லாததால் அவர்களுடைய திருமணம் தள்ளிப்போனது.
இதனையடுத்து பெண் வீட்டார், அந்த மாப்பிள்ளை மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது பெற்றோர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இதுவரை போலீசார் யாரையும் கைது செய்யவில்லை.