2ம் வகுப்பு மாணவன் கொலையில் 11ம் வகுப்பு மாணவனை கைது

புதன், 8 நவம்பர் 2017 (18:15 IST)
டெல்லியில் ரியான் சர்வதேச பள்ளி கூடத்தில் படித்த 2ஆம் வகுப்பு மாணவன் கொலையில் 11ஆம் வகுப்பு மாணவனை சிபிஐ கைது செய்துள்ளது.


 

 
டெல்லியில் குர்காவன் நகரில் நியான் சர்வதேச பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பிரதியூமான் என்ற 7வயது மாணவன் இரண்ராம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி காலை பிரதியூமான் ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான்.
 
இந்த கொலை குறித்த விசாரணை நடைபெற்று வந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர். 11ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை இந்த கொலை வழக்கில் கைது செய்துள்ளனர். 
 
மேலும் பள்ளி பேருந்து நடத்துனர் அசோக் குமார் சந்தேகத்திற்குரிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்