கார் டிரைவர் என்ன கற்பழிக்க முயன்றார் - நடிகை பரபரப்பு பேட்டி

வியாழன், 29 டிசம்பர் 2016 (11:15 IST)
ஒரு கார் டிரைவர் தன்னை கற்பழிக்க முயன்றதாக நடிகை ரஷ்மி கவுதம் தெரிவித்துள்ளார்.


 

 
தெலுங்கு பட உலகில் அறிமுகமானவர் ரஷ்மி கவுதம். தமிழில் மாப்பிள்ளை விநாயகர், கண்டேன், ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது பிரியமுடன் பிரியா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில், இவர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் ஒரு திடுக்கிடும் தகவலை பகிர்ந்து கொண்டார்.


 

 
சில வருடங்களுக்கு முன்பு, நான் படப்பிடிப்பை முடித்து விட்டு, ஆந்திராவின் கர்னூல் பகுதியை நோக்கி இரவு காரில் சென்று கொண்டிருந்தன். அப்போது நான் அயர்ந்து தூங்கிவிட்டேன்.  திடீரென அந்த காரின் டிரைவர் ஒரு காட்டுப் பகுதி வழியாக காரை ஓட்டி சென்றார். 
 
ஏன் இந்த பக்கம் செல்கிறீர்கள் என கேட்ட போது, இதுதான் குறுக்கு வழி என அந்த டிரைவர் கூறினார். அவர் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார். எனவே, நான் எனது முழு பலத்தையும் பயன்படுத்தி அவரிடம் சண்டையிட்டு, காரிலிருந்து வெளியே குதித்து தப்பினேன்” என்று அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்