மாநிலங்களவை தேர்தலில் 30 இடங்களில் வெற்றி.. மெஜாரிட்டியை நெருங்கும் பாஜக..!

Siva

வியாழன், 29 பிப்ரவரி 2024 (07:01 IST)
மக்களவையில் ஏற்கனவே மெஜாரிட்டிடன் இருக்கும் பாஜக மாநிலங்களவையில் மட்டும் மெஜாரிட்டி இல்லாமல் இருந்த நிலையில் தற்போது அங்கும் மெஜாரிட்டியை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 சமீபத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்ற போது காலியாக இருந்த 56 மாநிலங்களவை இடங்களில் 30 இடங்களை பாஜக வென்று உள்ளது. குறிப்பாக இமாச்சலப் பிரதேசம் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு வாக்களித்ததால் கூடுதலாக இரண்டு இடங்கள் பாஜகவுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதன் காரணமாக மாநிலங்களவையில் தற்போது பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது என்பதும் பாஜகவுக்கு மொத்தம் 97 எம்பிக்கள் மாநிலங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தேசிய ஜனநாயக கூட்டணியில் மாநிலங்களவையில் மொத்தம் 117 எம்பிக்கள் இருக்கின்றனர் என்பதால் மெஜாரிட்டிக்கு இன்னும் நான்கு எம்பிக்கள் மட்டுமே தேவை என்பதால் கிட்டத்தட்ட மெஜாரிட்டியை பாஜக நெருங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதன் காரணமாக மாநிலங்கள்வையில் இனி ஒரு மசோதா இயற்ற வேண்டுமென்றால் பிரச்சனை இருக்காது என்பது தெரிய வருகிறது. 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்