ரஜினிகாந்த் நடிகராக இருந்தாலும், அரசியல் ரீதியாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் நபராகவே பார்க்கப்படுகிறார். தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை அவர் வைத்திருப்பதால், ஒவ்வொரு சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலின் போதும், அவரின் ஆதரவை பெற அனைத்துக் கட்சிகளும் முயற்சி செய்வது வழக்கம்.
அவர் பேசும் போது “ மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலாப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர் ரஜினிகாந்த். அவர் இந்த மண்ணின் மைந்தர். எனவே அவருக்கு முதலில் மகாராஷ்டிரா பூஷண் விருதை வழங்கவேண்டும். அதோடு, பாரத ரத்னா விருதை வழங்கவும், மத்திய அரசுக்கு பரிந்துரைத்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று அவர் பேசினார்.