பீகார் நூடுல்ஸ் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்தது! – 6 பேர் பலி!

ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (15:12 IST)
பீகாரில் நூடுல்ஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் பிரபல நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் நூடுல்ஸ் ஆலையில் பாய்லர் வெடித்ததில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் அடையாளம் காணும் பணி நடைபெற்றுவருகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்