ப.சிதம்பரத்தை கைது செய்தவருக்கு ஜனாதிபதி விருது !

ஞாயிறு, 26 ஜனவரி 2020 (09:37 IST)
ஐ.என்.எக்ஸ் மீடிய முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் டெல்லியில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, சுவர் எறிக் குதித்து அவரைக் கைது செய்த டிஎஸ்பி ராமசாமி பார்த்தசாரதிக்கு சிறப்பாகப் பணியாற்றியதற்கான காவலர் விருதை ஜனாதிபதி வழங்கினார்.
இன்று நாட்டில் 71 வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு ஜனாதிபதியின் காவலர் விருது அறிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு, ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தை கைது செய்ய அவரது வீட்டின் சுவர் ஏறிக் குதித்த டிஎஸ்பி ராமசாமி உள்ளிட்ட 28 சிபிஐ அதிகாரிகள் இந்த விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும், ஐ.என்.எக்ஸ் மீடிய முறைகேட்டு வழக்கில் சிதம்பரத்தின் மகன் கார்த்தியைக் கைது செய்தவரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்