ஆட்சி அமைத்தால் 18+ பெண்களுக்கு... கெஜ்ரிவால் புது அறிவிப்பு

செவ்வாய், 23 நவம்பர் 2021 (11:12 IST)
பஞ்சாபில் ஆட்சி அமைத்தால் அங்கு உள்ள பெண்கள் அனைவருக்கும் மாதந்தோறும் தலா ரூ.1000 வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு. 

 
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாபில் வரும் 2022 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தால் பெண்கள் அனைவருக்கும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 
 
அதாவது ஒரு குடும்பத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் இந்த திட்டத்தின்படி மாதந்தோறும் இந்த தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த அறிவிப்பை அவர் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்