ஆம் ஆத்மி கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் நான் ஏன் தலையிட வேண்டும்? - அன்னா ஹசாரே

சனி, 28 மார்ச் 2015 (18:39 IST)
டெல்லியில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
 
இந்த நிலையில், சமூக ஆர்வலரான அன்னா ஹசாரேவிடம் ஆம் ஆத்மி கட்சியின் உட்கட்சி பூசல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு பதிலளித்த ஹசாரே, ஆம் ஆத்மி கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் நான் ஏன் தலையிட வேண்டும்? எனது புரிதல்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டது அது என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்