உலக அரங்கில் இந்தியாவை அவமானப்படுத்த சதி: வேவு விவகாரம் குறித்து அமித்ஷா

செவ்வாய், 20 ஜூலை 2021 (09:14 IST)
உலக அரங்கில் இந்தியாவை அவமானப்படுத்த சதி செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார் 
 
நேற்று முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் உளவு பார்த்த விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உலக அரங்கில் இந்தியாவை அவமானப்படுத்த வேண்டும் என்ற ஒற்றை இலக்கை மட்டுமே கொண்டு சில குழுக்கள் இயங்கி வருவதாகவும் அதற்கு நம் நாட்டின் அரசியல்வாதிகள் துணை போவதாக கூறினார் 
 
நாடாளுமன்றத்தில் முன்னேற்றுவதற்கான எது வந்தாலும் அதை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறார்கள் என்றும் இந்தியாவின் முன்னேற்றத்தை விரும்பாமல் சீர்குலைக்க நினைப்பவர்கள் உலக அளவில் இருக்கிறார்கள் என்றும் அதில் நம்முடைய அரசியல்வாதிகள் துணை நிற்கிறார்கள் என்றும் தெரிவித்தார்
 
நாட்டு நலனுக்கு முன்னுரிமை அளிப்பதில் மோடி அரசு தெளிவாக இருப்பதாகவும் என்ன நடந்தாலும் அந்த இலக்கை நோக்கி செல்வோம் என்றும் அவர் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் உளவு பார்த்த விவகாரம் நேற்று நாடாளுமன்றத்தில் இந்த நிலையில் இன்றும் அது தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்