விவசாயிகளின் கடன்களை அடைக்கும் சூப்பர்ஸ்டார்..

புதன், 21 நவம்பர் 2018 (13:44 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் உத்தரப்பிரதேச மாநில விவசாயிகளின் கடன்களை அடைக்கவிருக்கிறார்.
வட மாநிலங்களில் மழை பொய்த்துப் போனதால் ஏராளமான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். பலர் வங்கிகளில் வாங்கிய விவசாயக்கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்யும் அவல நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். 
இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், உத்திரபிரதேசத்தை சார்ந்த 1,398 விவசாயிகளின் 4.05 கோடி விவசாயக்கடனை அடைக்க முன்வந்துள்ளார். இவர் ஏற்கனவே 350 விவசாயிகளின் கடன்களை அடைத்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்