கேரளாவில் டேங்கர் லாரி மீது லாரி மோதி விபத்து

வியாழன், 27 ஏப்ரல் 2023 (19:23 IST)
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து வாளையாறு வழியாக கார்பண்டை ஆக்சைடு ஏற்றிச் சென்ற லாரி விபத்திற்குள்ளாகியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கார்பண்டை ஆக்சைடு கேஸ் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது பின்னால் வந்த வாகனம் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த லாரியில் இருந்து வெண்மை நிறத்தில் வாயு தொடர்ந்து வெளியேறி வருவதைப் பார்த்த மக்கள் அச்சமடைந்து, இத்குறித்து தீயணைப்பு வீரர்கள் வந்து அந்த வாயு வெளியேறுவதைக் கட்டுப்படுத்தினர்.

இதனால் அப்பகுதியில் அபாயம் ஏற்படும் வாய்ப்புகள்  நீங்கியது.

இந்த விபத்து குறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்