வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை. ஹாங்காங் நிறுவனம் மீது வழக்கு
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (11:00 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே வங்கியின் கணக்குகளை முடக்கி இண்டர்நெட்டில் பணத்தை கொள்ளையடிக்கும் திருட்டு அதிகமாக நடந்து வருகிறது.
அந்த வகையில் இன்று மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி என்ற வங்கியின் கணக்கு ஒன்றை முடக்கி அதன்மூலம் ரூ.94.42 கோடி கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தீவிர விசாரணை செய்த சைபர் க்ரைம் போலீசார் ஹாங்காங்கை சேர்ந்த நிறுவனம் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.