ஸ்பெஷல் சக்தி பெற மாமியாரை என்ன செய்தார் தெரியுமா மருமகன்? அதிரவைக்கும் பின்னணி

புதன், 26 டிசம்பர் 2018 (15:24 IST)
ஜார்கண்டில் மாந்திரீக சக்தி பெற மருமகன் மாமியாரை கொலை செய்து அவரது ரத்தத்தை குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ரங்கமடி கிராமத்தை சேர்ந்தவர் பிஹிலிண்ட்ரா. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. பிஹிலிண்ட்ரா பில்லி, சூனியம் போன்ற மாந்திரீக விஷயங்களில் மிகவும் ஆர்வம் கொண்டவர்.
 
இந்நிலையில் தனது சக்தியை அதிகரிக்க, தனது மாமியாரை கொலை செய்து அவரது ரத்தத்தை குடிக்க திட்டமிட்டார். அதன்படி மாமியாரை கொலை செய்த அவர் அவரின் ரத்தத்தை குடித்தார்.
 
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் பிஹிலிண்ட்ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வளர்ந்து வரும் காலகட்டங்களில் இவ்வாறான மூட நம்பிக்கையில் மக்கள் மூழ்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்