பொற்கோவில் அருகே புகையிலையை துப்பிய வாலிபர் அடித்து கொலை: பஞ்சாபில் பயங்கரம்!

வியாழன், 8 செப்டம்பர் 2022 (20:06 IST)
பொற்கோவில் அருகே புகையிலையை துப்பிய வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த பகுதியில் வாலிபர் ஒருவர் புகையிலையை துப்பியதாக தெரிகிறது 
 
இதனை கவனித்த சீக்கியர் ஒருவர் அவரிடம் வாக்குவாதம் செய்த நிலையில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்னொரு   அந்த பகுதியில் இருந்த சீக்கியர்கள் ஒன்று சேர்ந்து அந்த வாலிபரை அடித்து கொலை செய்ததாக தெரிகிறது
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து ஒருவரை கைது செய்துள்ளதாகவும் இருவரை தேடி வருவதாகவும் கூறப்படும் கூறப்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்