ஆபத்தில் 50 லட்சம் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் !!

வெள்ளி, 2 ஜூலை 2021 (08:42 IST)
தமிழ்நாட்டின் பொதுவிநியோக திட்டத்தில் தரவுகள் ஹேக் செய்யப்பட்டு 50 லட்சம் மக்களின் ஆதார், செல்போன் எண்கள் கசியவிடப்பட்டுள்ளது. 

 
ஆம், கடந்த ஜூன் 28 ஆம் தேதி பொதுவிநியோக திட்ட இணையதளத்தில் இருந்து ஆபத்தான ஹேக்கிங் நடந்துள்ளதாகவும், 49,19,668 பேரின் ஆதார் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளதாகத சைபர் செக்யூரிட்டி நிறுவனமான டெக்னிசான்ட் தெரிவித்துள்ளது.
 
இந்த ஹேக்கிங்ல் குடிமக்களின் ஆதார் எண், பயனாளிகளின் விவரங்கள், அவர்களது உறவினர்களின் விவரங்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் தரவு தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டதாக டெக்னிசான்ட் கூறியுள்ளது. இதோடு 50 லட்சம் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்