நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர் : டெல்லி திஹார் சிறையில் பரபரப்பு

வெள்ளி, 20 மார்ச் 2020 (05:40 IST)
நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி திகார் சிறையில் சற்றுமுன் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடைசிவரை சட்டப்போராட்டம் நடத்திய நால்வரின் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சற்றுமுன் நால்வரும் தூக்கில் தொங்கினர்
 
நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் சாகும் வரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதாக டெல்லியில் இருந்து சற்றுமுன் செய்தி வெளிவந்துள்ளது
 
அதிகாலை வரை நடத்திய சட்டப்போராட்டம் செய்தத்தை மறுதலித்து, தீர்ப்பை உறுதி செய்திருந்தது நீதித்துறை என்பதால் நிர்பயா குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர். அதே நேரத்தில் கடைசி வரை சட்டப்போராட்டம் செய்த குற்றவாளிகளின் உறவினர்கள் பெரும் சோகத்துடன் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்