டார்ச் வெளிச்சத்தில் 32 பேருக்கு அறுவை சிகிச்சை

செவ்வாய், 26 டிசம்பர் 2017 (21:32 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு சுகாதார மையத்தில், டார்ச் வெளிச்சத்தில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

 
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு சுகாதார மையத்தில் மருத்துவர் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மருத்துவமனையில் இன்வெர்டர் இல்லாததால், மின்சாதானங்கள் பயன்படுத்த முடியாமல் போனது.
 
இதையடுத்து மருத்துவர்கள் டார்ச் வெளிச்சத்தில், 32 நோயாளிகளுக்கு கண் அறுவை சிகிச்சை செய்தனர். இதுபோன்ற கொடுமையான சம்பவங்கள் உத்தரபிரதேச தொடர்ந்து நடத்து கொண்டிருக்கிறது.

நன்றி: ANI

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்