சிக்கிம் மாநிலத்தில் கனமழையால் வெள்ளம்.. 23 ராணுவ வீரர்கள் மாயம்..!

புதன், 4 அக்டோபர் 2023 (12:09 IST)
சிக்கிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த வெள்ளம் காரணமாக 23 ராணுவ வீரர்களை காணவில்லை என்று செய்திகள் வெளியாகிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
சிக்கிம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயம் என்றும், வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
வடக்கு சிக்கிம் பகுதியில் மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும் சிக்கிம் லச்சன் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள் கடும் துன்பத்தில் உள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்