கும்பமேளாவில் 1000 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி!

வியாழன், 15 ஏப்ரல் 2021 (08:50 IST)
ஹரித்துவாரில் 28 லட்சம் பேர் பங்கேற்ற கும்பமேளாவில் 1000 பேருக்கு  மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வட இந்தியாவில், இமய மலை அடிவாரத்தில் இருக்கும் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் நகரத்தில் கும்பமேளா திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. இத்திருவிழாவில் புனித நீராட, மக்கள் லட்சக் கணக்கில் குவிந்தனர். மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருப்பதால் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறிக் கொண்டிருக்கின்றனர். 

இந்நிலையில், ஹரித்துவாரில் 28 லட்சம் பேர் பங்கேற்ற கும்பமேளாவில் இதுவரை 10000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அந்த பகுதியில் நாளொன்றுக்கு 50000 சோதனைகள் வரை மேற்கொள்ளப்படுவதாக சொல்லப்படுகிறது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என சொலல்ப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்