’அதிர்ச்சி’ - 100 தீவிரவாதிகள் இந்தியாவில் நுழைந்து தாக்குதல் நடத்தப்போவதாக தகவல்!

புதன், 5 அக்டோபர் 2016 (19:37 IST)
கடந்த 18 ஆம் தேதி, ஜம்மு காஸ்மீர் மாநிலம் உரியில் பாகிஸ்தான் தீவிரவதிகள், தாக்குதல் நடத்தியதில், 18 இந்திய ராணுவ வீரர்கள் உரிழந்தனர்.

 

 
 
இதை அடுத்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் சூழல் உருவானது.
 
இதற்கிடையே, ”இந்நேரம் நான் அதிகாரத்தில் இருந்திருந்தால், இந்தியாவிற்கு உடனடியாக பதிலடி கொடுத்திருப்பேன்” என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கூறினார்.
 
இந்நிலையில்,  100 பாகிஸ்தான் தீவிரவாதிகள், இந்தியாவில் ஊடுருவி இந்திய மக்கள் மீது தாக்குதலில் நடத்தப்போவதாக தகவல் கிடைத்ததாக, இந்திய தேசிய பாதுகாப்பு ஏஜென்சி பிரதமர் மோடியிடம் கூறியுள்ளனர்.
 
இதை அடுத்து, பிரதமர் மோடியின் அறிவுருத்தலில் பேரில், இந்திய எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்