புத்தாண்டு மகிழ்ச்சியும், வளமும் கொண்டு வரட்டும்: பிரதீபா பாட்டீல்

வெள்ளி, 1 ஜனவரி 2010 (10:54 IST)
2010 புத்தாண்டு மகிழ்ச்சியும், வளமும் கொண்டு வரட்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “புத்தாண்டு பிறக்கும் இத்தருணத்தில் இந்தியக் மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்தாண்டு ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியையும், வளத்தையும் கொண்டு வரட்டும்.

நமது நாட்டின் முன்னேற்றத்திற்கும், நலத்திற்கும் பாடுபடவும், பரஸ்பர நம்பிக்கை மற்றும் பரிவு உணர்வை வலுப்படுத்தி மக்களை ஒருங்கிணைக்கவும் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம” எனக் கூறியுள்ளார்.

குடியரசு துணைத்தலைவர் எம்.ஹமீத் அன்சாரி விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், “புத்தாண்டு வளத்தையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் தரட்டும” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்