பிஸ்கட் ஆசை காட்டி சிறுமியை பலாத்காரம் செய்தோம்: வாக்குமூலம்

திங்கள், 22 ஏப்ரல் 2013 (18:30 IST)
FILE
டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி, "பிஸ்கட் தருவதாகக் கூறி சிறுமியை பலாத்காரம் செய்தோம்" என்று காவல்துறையில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

டெல்லி காந்தி நகரில் 5 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் குமார் முத‌லி‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர். அத‌ன்‌பிறகு ம‌ற்றொரு கு‌ற்றவா‌ளியான பிரதீப் எ‌ன்பவரையு‌ம் ‌பீகா‌ர் செ‌ன்று டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.

காவல்துறையிட‌ம் இன்று பிரதீப் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது, சம்பவத்தன்று மாடிப்படி அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் பத்து ரூபாய் நோட்டை காண்பித்து உள்ளே பிஸ்கட் வைத்திருக்கிறோம். சாப்பிடலாம் வா என்று எங்கள் அறைக்குள் அழைத்தோம்.

உள்ளே வந்த சிறுமியின் வாயைப் பொத்தி அவளை நானும் மனோஜ் குமாரும் பலாத்காரம் செய்தோம். மயங்கிக் கிடந்த அவள் செத்துப் போயிருப்பாள் என நினைத்து நானும் மனோஜ் குமாரும் பீகாருக்கு தப்பிச் சென்று விட்டோம் என்று கூறியு‌ள்ளா‌‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்