ஊழல் நீதிபதிகளுக்கு அரசியல் பாதுகாப்பு கூடாது: தலைமை நீதிபதி

சனி, 16 ஏப்ரல் 2011 (17:32 IST)
ஊழல் நீதிபதிகளுக்கு அரசியல் பாதுகாப்பு அளிக்ககூடாது என்று தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைக் கூறிய அவர்,நீதித் துறை என்பது அதி சிறப்பான சபை அல்ல என்றார்.

மேலும் நீதிபதிகள் ஓய்வு காலத்திற்கு பின்னர் விசாரணைக் குழு போன்ற பணிகளில் ஈடுபடுவது போன்ற சபலங்களை கைவிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நீதித் துறை சுதந்திரத்திற்கும், நீதிபதிகளின் பொறுப்புடைமைக்கும் இடையே ஒரு சமமான இடைவெளி இருக்க வேண்டும் என்றும் கூறிய அவர், வழக்கறிஞர்கள் ஊழல் குற்றசாட்டுகள் அல்லாத நேர்மை உடையவர்களாக இருத்தல் வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்