உ.பி. ரயில்கள் மோதல்; பலி 4 ஆக உயர்வு

சனி, 2 ஜனவரி 2010 (13:12 IST)
கான்பூர்: உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் பாங்கி ரயில் நிலையம் அருகே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த ரயில் மீது மற்றொரு விரைவு ரயில் மோதியதில் 3 பயணிகள் உயிரிழந்தனர். மற்றொரு ரயில் விபத்தில் ரயில் ஓட்டுநர் உயிரிழந்தார்.

பாங்கி ரயில் நிலையத்தில் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்புறமாக, அதே தண்டவாளத்தில் வந்த கோராக்தம் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. பனிமூட்டம் காரணமாக அதே வழித்தடத்தில் ரயில் நிற்பது தெரியாமல் இவ்விபத்து ஏற்பட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரயாக் ராஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசிப்பெட்டி உருக்குலைந்து சிதைந்தது. இதில் பயணிகள் 3 பேர் உயிரிழந்தனர்.

இதேபோல் நடந்த மற்றொரு ரயில் விபத்தில் ரயில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். இரு விபத்துக்களிலும் சுமார் 40 பேர் காயம் அடைந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்