காதல் பொய்.. காமம் தான் நிஜம் என்று சொன்னால் உடனே பல பேர் எதிர்ப்புக்குரல் எழுப்புவார்கள்.. ஆனால் நிதானமாக யோசித்து பார்த்தால் இதில் உண்மையின் சதவீதம் தான் அதிகம் என்பது புரியும் என்கிறார் இயக்குனர் R.D.குஷால் குமார்.. பூம் பூம் காளை படத்தின் மையக்கருத்தாக இவர் முன் வைத்திருப்பதும் இந்த விஷயத்தை தான்..
நாயகன், நாயகி இருவரும் திருமணம் முடித்து தேனிலவு செல்கிறார்கள்.. நாயகியோ கணவனுடன் அன்பாக பழகி, அதன்பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபடவே விரும்புகிறாள்.. நாயகனோ திருமணம் முடிந்தபின் இனி அடுத்தது அந்த விஷயம் தானே.. அது நடப்பது எப்போது என பூம் பூம் காளையாக அலைபாய்கிறான்.
இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், அப்புக்குட்டி, காதல் அருண், சச்சு, கிரேன் மனோகர், அபிநயாஸ்ரீ உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிக்சர்ஸ்' உலகமெங்கும் இன்று வெளியிட்டுள்ளது.