விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் நடித்திருக்கும் இதுவொரு ஆக்ஷன் படம். படத்தில் சண்டைக் காட்சிகள் பிரதானமாக இடம்பெறுகிறது. முக்கியமாக வடசென்னையில் விக்ரம் பிரபுவை எதிரிகள் துரத்தும் சேஸிங் காட்சியை பிரமாண்டமாக எடுத்துள்ளனர். ஆக்ஷன் காட்சிகளுக்கு இணையாக காதல் காட்சிகளும் உள்ளன. பாங்காக்கிலுள்ள அருவியொன்றில் பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர்.