2வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (09:37 IST)
இந்திய பங்குச்சந்தை நேற்று 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் சரிந்துள்ளது பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பை பங்குச் சந்தையின் வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 140 புள்ளிகள் சார்ந்து 65 ஆயிரத்து 648 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.  
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 38 புள்ளிகள் சார்ந்து 19,489 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
பங்குச்சந்தை தொடர்ச்சியாக இரண்டு நாள் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திய நிலையில் இனி வரும் நாட்களில் பங்குச்சந்தை உயருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்