பங்குச்சந்தை இன்று திடீர் வீழ்ச்சி.. சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கும் மேல் சரிவு..!

புதன், 2 ஆகஸ்ட் 2023 (12:59 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே இருந்தது என்பதும் கடந்த இரண்டு நாட்களாக கூட சென்செக்ஸ் உயர்ந்தது என்பதையும் பார்த்தோம். 
 
ஆனால் இன்று திடீரென 700 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் வீழ்ச்சி அடைந்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்செக்ஸ் இன்று 722 புள்ளிகள் குறைந்து 65 ஆயிரத்து 740 என விற்பனை ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை அனுப்பி 220 புள்ளிகள் குறைந்து 19500 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
இன்று ஒரே நாளில் பங்குச்சந்தை 700க்கும் மேற்பட்ட புள்ளிகள் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினாலும் இனிவரும் நாட்களில் பங்குச்சந்தை உயர அதிக வாய்ப்பு இருக்கிறது என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்