இரண்டு நாள் ஏற்றத்திற்கு பின் திடீரென 500 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!

புதன், 14 செப்டம்பர் 2022 (09:39 IST)
இந்த வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் ஆன திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய தினங்களில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர் 
 
இந்த நிலையில் இன்று திடீரென 500 புள்ளிகள் வரை சென்செக்ஸ் சரிந்தது முதலீட்டாளர்கள் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
சற்றுமுன் மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 560 புள்ளிகள் சரிந்து 60010 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 150 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 914 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
 
நேற்று அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்த நிலையில் அதன் தாக்கம்தான் இந்திய பங்குச்சந்தைகளில் உள்ளது என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் பங்குச்சந்தை மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்