கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவு இன்று ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாகவும், இன்றைய வர்த்தக முடிவின்போது அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87 ஆக நிறைவு பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய வணிக நேர முடிவில் ரூபாயின் மதிப்பு ரூ.87.19 ஆக இருந்த நிலையில், இன்று அது 19 காசுகள் உயர்ந்துள்ளது. வெளிநாட்டு நிதி படிப்படியாக வெளியேறிக் கொண்டிருப்பதாக கூறப்பட்டதால் பங்குச்சந்தை மிக மோசமாகச் செயல்பட்டது. ஆனால், அதே நேரத்தில் வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறினாலும், உள்ளூர் முதலீடுகள் அதிகரித்ததன் காரணமாக ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
நேற்றைய நிலவரப்படி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.3405 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்த நிலையில், உள்ளூர் முதலீட்டாளர்கள் ரூ.4,851 கோடி முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இன்றைய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 740 புள்ளிகள் உயர்ந்துள்ளதும், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.