ரூ.36,616-க்கு விற்பனையாகும் தங்கம் !

புதன், 19 மே 2021 (10:45 IST)
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.   
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.  
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.2 உயர்ந்து ரூ.4,577-ஆக விற்பனையாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்