உயர்ந்தது தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் என்ன??

திங்கள், 28 டிசம்பர் 2020 (11:01 IST)
கடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று விலை அதிகரித்துள்ளது. 

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.  இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.
   
ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.38,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல கிராமிற்கு ரூ.28 உயர்ந்து ரூ.4,758-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்